எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 18 மே, 2015

டாக்டர் .கிருஷ்ணசாமியுடன் சந்திப்பு: உலகம் சுற்றியதுதான் மோடியின் சாதனை- வைகோ பேட்டி.

.புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று காலை 10.30 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்தார்.
பின்னர் வைகோவும் டாக்டர் கிருஷண்சாமியும் நிருபர்களை சந்தித்தார்கள். அப்போது கிருஷ்ணசாமி கூறியதாவது:–
தமிழர்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன். சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை சந்தித்தேன்.
இன்று ம.தி.மு.க. தலைவர் வைகோவை சந்தித்து இருக்கிறேன். ஈழத் தமிழர் நலம் உள்பட தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக வைகோ கூறியுள்ளார்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
பின்னர் வைகோவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்தித்த பிறகு, சட்டசபை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் சேர வாய்ப்பு உள்ளது என்று கூறி இருக்கிறாரே?
பதில்:– எங்கள் சந்திப்பின் போது அரசியல் குறித்து பேசவில்லை. தேர்தல் குறித்தும் பேசவில்லை. நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலின் தனது கருத்தை கூறி இருக்கிறார். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
கே:– ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறதா?
ப:– கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக வக்கீல் ஆச்சார்யா கூறியுள்ளார்.
கே:– சட்டசபை தேர்தலுக்கு ம.தி.மு.க. தயாராக உள்ளதா?
ப: மக்களுக்காக ம.தி.மு.க. உள்ளது. கடந்த தேர்தலை புறக்கணித்தோம். தேர்தலுக்கு தனியாக ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.
கே: ஆர்.கே. நகரில் ம.தி.மு.க. போட்டியிடுமா?
ப: அது குறித்து எந்த முடிவும் செய்யவில்லை.
கே: பிரதமர் மோடியின் ஓராண்டு சாதனை பற்றி?
ப: உலகம் சுற்றும் நரேந்திரமோடி.
இவ்வாறு வைகோ கூறினார்.
— Anand Mba உடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக